Sunday, 10 September 2017

சிரிப்பு யோகாவின் சிறப்பு நன்மைகள் | Laughing yoga Health Benefits|Organ...





Among the people sadness and stress is dumped , here is the practice of laughing Yoga which helps people to make their life better

சிரிப்பு யோகாவின் சிறப்பு நன்மைகள்



Official Website   : https://goo.gl/cYOmYx

Facebook Page   : https://goo.gl/8B9h4K

Twitter Page        : https://goo.gl/ghPqqK

Facebook Group : https://goo.gl/iarJFH

Youtube Channel : https://goo.gl/Gy4kna

For Amazon  : http://amzn.to/2lvdXox

For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN

Saturday, 9 September 2017

8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk Health Benefits | Organi...





8 வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பயன்கள் | 8 walk Health Benefits | Organic Living | Tamil Health Tips https://youtu.be/nqpYx4SgxCo

Friday, 8 September 2017

30 வகை அவசர சமையல்

செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!


மல்டி பருப்புப் பொடி


தேவையானவை:
துவரம்பருப்பு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளு - தலா 4 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயத்தூள்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெருங்காயத்தூள், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியாக வெறும் கடாயில் பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைக்கவும்.

சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், குழம்பு வைக்க முடியாத அவசர காலங்களில் கை கொடுக்கும் இந்த மல்டி பருப்புப் பொடி.

தனியா-மிளகு-சீரகப்பொடி

தேவையானவை:
தனியா - 4 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 10,
சீரகம் - 4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை ஒன்றாக வறுக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்கவும். இதை, ஈரமற்ற, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இந்தப் பொடியை, ஒரு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பொடி சேர்த்து, எண்ணெய், நெய் கலந்து சாப்பிடலாம்.

சீரக ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு கப், சீரகம் - 4 டீஸ்பூன், பூண்டு - 15 பல், சோம்பு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - கால் டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு... கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

முதல் நாள் இரவே, கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தயார் செய்து கொண்டால், காலையில் சாதம் வடித்துக் கலந்தால், ஈஸியாக வேலை முடிந்து விடும்.

Click here


தக்காளி சாதம்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
வெங்காயம் - 2,
தக்காளி - கால் கிலோ,
இஞ்சி - ஒரு துண்டு,
தோலுரித்த பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
கடுகு - கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நசுக்கிய இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை போட்டு வதக்கவும். பிறகு, ஆய்ந்து நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும். மணம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கி, அதில் வடித்த சாதம் போட்டு கலந்தால் தக்காளி சாதம் ரெடி.

லெமன் ரைஸ்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
எலுமிச்சம்பழம் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். வறுத்த கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.


கறிவேப்பிலைப் பொடி


தேவையானவை:
கறிவேப் பிலை (ஆய்ந்தது) - ஒரு கப்,
மிளகு - 10,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
 உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், கறிவேப்பிலையைப் போட்டு நன்கு வறுக்கவும். அது ஆறியதும், 'மொறுமொறு'வென ஆகிவிடும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து ஈரமில்லாத மிக்ஸியில் பொடிக்க... சுவையான கறிவேப்பிலைப் பொடி ரெடி!

சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.


கத்திரிக்காய் ரைஸ்


தேவையானவை:
அரிசி - கால் கிலோ,
பிஞ்சுக் கத்திரிக்காய் - 6,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.

ஈஸி காரக் குழம்பு

தேவையானவை:
புளி - 50 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 10 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, வடிகட்டிய புளித் தண்ணீர் விட்டு, குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன்!


கிரீன் வெஜிடபிள் ரைஸ்

தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ,
கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - தலா ஒரு கப், வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று,
பீன்ஸ் - 10,
பச்சை மிளகாய் - 3,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸை பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சாதம் போட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைட் டிஷ்.

புதினா ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 2 டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
ஸ்வீட் கார்ன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புதினா சேர்த்து மணம் வரும் வரை வதக்கி, உப்பு சேர்த்துக் கலந்து, மீண்டும் வதக்கவும். இந்தக் கலவையில் உதிர்த்த ஸ்வீட் கார்ன், சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பட்டர்-புதினா-வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை:
பிரெட் - ஒரு பாக்கெட்,
வெண்ணெய் - 100 கிராம்,
ஆய்ந்து, அலசிய புதினா - ஒரு கப்,
கேரட் துருவல் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆய்ந்த புதினா, பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் மீது, புதினா பேஸ்ட் மற்றும் வெண்ணெயைத் தடவவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவலை அதன் மீது பரவலாகத் தூவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். இதேபோல், தேவைப்படும் அளவுக்கு தயார் செய்யவும். தயார் செய்த பிரெட்களை டோஸ்டரில், டோஸ்ட் செய்து பரிமாறவும். அல்லது தவாவில் டோஸ்ட் செய்தும் பரிமாறலாம்.


நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட்


தேவையானவை:
நறுக்கிய வெள்ளரி, தக்காளி, வெங்காயம் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லா காய்கறிகளையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து பரிமாறவும்.

முதல் நாள் 'பார்ட்டி', 'ட்ரீட்' என அதிகம் கொழுப்பு சத்து நிறைந்த உணவு சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் அதை பேலன்ஸ் செய்வதற்கு, இந்த சத்து நிறைந்த எளிய உணவை சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

வெஜிடபிள் ரவா உப்புமா

தேவையானவை:
ரவை - கால் கிலோ,
பட்டாணி - 100 கிராம்,
வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, பீன்ஸ் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு, பொட்டுக்கடலை சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். அது, கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை மெதுவாகத் தூவவும். எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

மிக்ஸட் தயிர் சாதம்

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,
புளிப்பில்லாத தயிர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று,
கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துக்கள் - தலா கால் கப்,
திராட்சை - 20,
பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரித் துண்டுகள் - தலா ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு, வேக விட்டு நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி நீங்கலாக, மற்ற அனைத்து காய்கறிகள், பழங்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். அதில் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, நன்கு மசித்த சாதம், கொத்தமல்லி சேர்த்துக் கலக்க... சுவையான மிக்ஸட் தயிர் சாதம் ரெடி!


பூண்டுப் பொடி


தேவையானவை:
பூண்டு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை கருகாமல் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறிய தும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்துப் பொடிக் கவும். அதனை ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைத்து, தேவைப் படும்போது பயன் படுத்திக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு மசாலா பொரியல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - அரை கிலோ,
வெங்காயம் - 2,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

இது, எல்லா வகையான 'வெரைட்டி ரைஸ்', சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சிறந்தது.

தக்காளி ரசம்

தேவையானவை:
தக்காளி - கால் கிலோ,
புளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வடிகட்டிய புளித் தண்ணீரை விட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கலந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக கலந்து நுரைத்து, ஒருமுறை கொதித்ததும் பெருங்காயத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


காப்ஸிகம் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பூண்டு - 10 பல்,
இஞ்சி - சிறிய துண்டு,
கடுகு - கால் டீஸ்பூன்.
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடமிளகாய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதம் சேர்த்துக் கலக்க... காப்ஸிகம் ரைஸ் ரெடி!


பேபி கார்ன் பஜ்ஜி

தேவையானவை:
பேபி கார்ன் - 6, கடலை மாவு,
அரிசி மாவு - தலா அரை கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

இதேபோல் வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.

இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்!


வெஜிடபிள் நூடுல்ஸ்

தேவையானவை:
நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்,
கேரட் துருவல், பட்டாணி, நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய ஸ்வீட் கார்ன் கலவை - ஒரு கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறி தளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொடுத்துள்ள எல்லா காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன தும், தண்ணீர் விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ் சேர்த்துக் கிளறவும். வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10,
உலர்ந்த திராட்சை - 20,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத் துள்ள எல்லா பொருட் களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.

சேமியா உப்புமா

தேவையானவை:
சேமியா - ஒரு பாக்கெட்,
கேரட் துருவல்,
நறுக்கிய குடமிளகாய் - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, உப்பு சேர்த்து, ஒரு பங்கு சேமியாவுக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியாவைப் போட்டுக் கிளறவும். வெந்ததும், எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கிளறி இறக்கவும்.

சேமியாவுக்குப் பதிலாக கோதுமை ரவை, அரிசி ரவை சேர்த்தும் செய்யலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி ஏற்றது.

தக்காளி சட்னி

தேவையானவை:
வெங்காயம், தக்காளி - தலா கால் கிலோ,
இஞ்சி - சிறு துண்டு,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... தோலுரித்த வெங்காயம், கழுவிய தக்காளி போட்டு நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வும். இவற்றையெல்லாம் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடுகு தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறலாம்.

இந்த சட்னி இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள டேஸ்ட்டாக இருக்கும்.

பீட்ரூட் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவிக் கழுவி, துருவிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது, பொன்னிறமாக வதங்கியதும் பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும். வெந்ததும் இறக்கி, சாதம் சேர்த்துக் கலக்கவும்.


வெங்காய சட்னி


தேவையானவை:
வெங்காயம் - ஒன்று,
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கடுகு - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொட்டிக் கலந்து பரிமாறவும்.

இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இது சிறந்த காம்பினேஷன்.

தயிர் பச்சடி

தேவையானவை:
தயிர் - ஒரு கப்,
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, கேரட் துருவல் கலவை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகள், பச்சை மிளகாய் - இஞ்சி பேஸ்ட், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கினால்... தயிர் பச்சடி ரெடி!

இது, வத்தல் குழம்பு சாதம், வெஜிடபிள் ரைஸூக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்!


வெஜிடபிள் கூட்டு


தேவையானவை:
கேரட், வெள்ளரிக்காய், கத்திரிக்காய், சௌசௌ, பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பீன்ஸ் - 6,
துவரம்பருப்பு - ஒரு கப்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும். வேக வைத்த காய்கறிக் கலவையுடன் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட... வெஜிடபிள் கூட்டு தயார்!


மாங்காய் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப்,
மாங்காய் (பெரியது) - 1,
பேபி கார்ன் - 2,
பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
இஞ்சி - சிறு துண்டு,
புதினா - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கலந்து, பின்னர், மாங்காய் துருவல் போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கினால், மாங்காய் ரைஸ் ரெடி!

பாசிப்பருப்பு தால்

தேவையானவை:
பாசிப்பருப்பு - 100 கிராம்,
தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பு, தக்காளி சேர்த்து வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்பு-தக்காளியை அதில் சேர்த்து, உப்பு போட்டு, கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

இதனை, சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கோவைக்காய் ரைஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப், கோவைக்காய் - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 6 பல்,
கடுகு - கால் டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில், நெய் விட்டு கடுகு தாளித்து... சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதங்கியதும் கோவைக்காய் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

முந்திரியின் முத்தான நன்மைகள் !!

👉 முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன.

👉 செறிவு ட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் இருக்கின்றது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

👉 முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

👉 முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

👉 இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

👉 முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

👉 முந்திரிப் பருப்புக்களை ஒரு கையளவு உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுக்குள் வைக்கும்.

👉 முந்திரியில் உள்ள தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உணவில் உட்கொள்வது நல்லது.

👉 முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர;ச்சி, செரிமானம் மற்றும் நியு க்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.

👉 டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. எனவே முந்திரியை அளவுடன் சாப்பிடவேண்டும்.

👉 முந்திரியில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும் இரத்தநாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

எனவே இதனை அளவோடு உணவில் சேர;த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் !!

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.
வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!
தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..
அன்று காலை எழுந்தவுடன்
அவருக்கு ஒரு பிரச்னை.
சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.
இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.
டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன
அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.
‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.
‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்
கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என
குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்
வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!
‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!
நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்
இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

Thursday, 7 September 2017

கடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம் | Ground nuts Health Benef...





கடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம் | Ground nuts Health Benefits | Organic Living https://youtu.be/L6DynZk5fuE

பிட்காயின் முழு தகவல் - Full Detail about Bitcoin

பிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?


  • பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம்
  • யாரும் அதை கட்டுப்படுத்துவதில்லை.
  • பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை.
  • கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.


மற்ற நாணயங்களில் இருந்து பிட்காயின் எவ்வாறு வேறுபடுகிறது?


  • மின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும்.
  • அந்த வகையில், இது டாலர், யூரொ, ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.
  • எனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான். 
  • எந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை.
  • இது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது.


பிட்காயின் உருவாக்கியது யார்?


  • முதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது. 
  • தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது. 
  • அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.


பிட்காயின் அச்சிடுவது யார்?


  • யாரும் இல்லை. 
  • இந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை. 
  • வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.
  • மாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. 
  • அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்.
  • பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.
  • மறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.
  • எனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது
  • ஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. 
  • எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.


பிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது?

  •   வழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில்      தயாரிக்கப்படும்.
  • கோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை)
  • ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
  • பிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.
  • திறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.
  • வேகமாக பரவி வரும் பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
  • சர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin). 
  • 1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன. 
  • 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் ஃபைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தனர். 
  • இதிலிருந்து தப்பிக்கவே பிட்காயின் என்ற மெய்நிகர் பணம் உருவாக்கப்பட்டது.
  • இந்த பிட்காயின்தான் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடியாகவும், அதன் தொடக்கப் புள்ளியாகவும் இருந்தது.
  • பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கரன்சி இருக்கிறது. ஆனால் இந்த பிட்காயின் என்பது சர்வதேச கரன்சி ஆகும். 
  • எந்த நாட்டிலும் இந்த கரன்சியை மாற்றிக்கொள்ள முடியும். 
  • எந்த இடத்திலிருந்தும் இந்த பிட்காயின் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும். யாருக்கும் எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும். 
  • இதை கண்டுபிடித்து யார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை.
  • இதை கண்டுபிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுமமா? என்பது கண்டறியப்படவில்லை. 
  • ஆனால் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் பிட்காயின் மற்றும் அதன் மென்பொருளை வெளியிட்டார்கள். 
  • இதன் மூலம் ஒருவர் யாருக்கும்? எந்த நாட்டில் வசிப்பவருக்கும் பணத்தை அனுப்ப முடியும். 
  • இந்த பரிவர்த்தனையை மூன்றாவது நபர் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. திருடவும் முடியாது. 
  • இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைகளை நிகழ்த்தித் தரும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர்.
  • பிட்காயின் பரிவர்த்தனையை விவரிக்கும் வரைபடம்.
  • உலகம் முழுக்க ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
  • இதனை நிகழ்த்தும் பிளாக்செயின் இயக்க தளமானதின் பரிவர்த்தனைகள் அனைத்தும் புதிர் வடிவிலே இருக்கும். 
  • ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒரு லட்ஜரில் பதிவேற்றப்படும். 
  • அடுத்த பத்து நிமிடங்களுக்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடுத்த லெட்ஜரில் பதிவேற்றபடும். 
  • மைனிங் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும். 
  • சமீபத்தில்தான் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில பிரபல வங்கிகள் பிட்காயின் பரிவரிதனைகளுக்கான சோதனைகளை நடத்தியன..
மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்


     




அணுகவும்
9626233344


கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்


Buy Bitcoin in " ZEBPAY " APP:

Click Here : http://link.zebpay.com/ref/REF33447601

Buy Bitcoin in "UNOCOIN" Use this link below

https://www.unocoin.com/?referrerid=202671

Wednesday, 6 September 2017

சுக்கில் இருக்கு சூட்சுமம் !!


மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டை காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

👁‍🗨 சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் :

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள்முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல்தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்

பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்குகிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போதுபயன்படுத்தலாம்.

👁‍🗨 சுக்கு மொழிகள் பத்து :

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

 👁‍🗨 பொதுப்பயன்கள் :

பித்தம் அகற்றும். வாயு தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியை குணப்படுத்தும். மூட்டுவலி மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

👁‍🗨 மருத்துவப் பயன்கள் :

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்

கரும்பு

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை:

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்:

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்:

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவுக்கு கரும்பு:

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்:

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி:

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

அஸ்வகந்தா.மூலிகை

                                                                                                                                                                                       இந்தியாவில் கிடைக்கும் மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம்.
இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை.
முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த பகுதியில் காணலாம்.

1. மன அழுத்தம் அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

2. நரம்பு மண்டலம் பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

3. கேன்சரை தடுக்க அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

4. நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

5. ஆண்மை அதிகரிக்க! அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

6. வேகம் அதிகரிக்கும் அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

7. குணப்படுத்தும் பிற நோய்கள் அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

8. எப்படி சாப்பிடலாம்? நாட்டு மருந்து கடைகளில் அஸ்வகந்தா பொடி மற்றும் லேகிய வடிவில் கிடைக்கிறது. இதனை நீங்கள் நாட்டு மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் - இயற்கை மருத்துவம்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.

இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது.

உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் தருகிறது பெருங்காயம். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.

ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன. பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

#மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

#நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

#மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

#கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

#பற்கள் -மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

#நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

#ரத்தம் -வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

#சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

#நுரையீரல் - இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

#வயிறு காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

#கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.
கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

 #கல்லீரல் - மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

 #மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

#பாதம் கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்

பாதம், விரல் வலி சரியாகும்.

Tuesday, 5 September 2017

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்…
இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!
விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.