Friday, 8 September 2017

முந்திரியின் முத்தான நன்மைகள் !!

👉 முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன.

👉 செறிவு ட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் இருக்கின்றது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

👉 முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

👉 முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

👉 இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

👉 முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

👉 முந்திரிப் பருப்புக்களை ஒரு கையளவு உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுக்குள் வைக்கும்.

👉 முந்திரியில் உள்ள தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உணவில் உட்கொள்வது நல்லது.

👉 முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர;ச்சி, செரிமானம் மற்றும் நியு க்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.

👉 டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. எனவே முந்திரியை அளவுடன் சாப்பிடவேண்டும்.

👉 முந்திரியில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும் இரத்தநாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

எனவே இதனை அளவோடு உணவில் சேர;த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம் !!

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது..???

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.
வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!
தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..
அன்று காலை எழுந்தவுடன்
அவருக்கு ஒரு பிரச்னை.
சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.
இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.
டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன
அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.
‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.
‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக்
கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என
குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர்
வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!
‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!
நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில்
இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

Thursday, 7 September 2017

கடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம் | Ground nuts Health Benef...





கடலை சாப்பிடுவதால் ஏற்படும் குழந்தை பாக்கியம் | Ground nuts Health Benefits | Organic Living https://youtu.be/L6DynZk5fuE

பிட்காயின் முழு தகவல் - Full Detail about Bitcoin

பிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?


  • பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வடிவ நாணயம்
  • யாரும் அதை கட்டுப்படுத்துவதில்லை.
  • பணம் மற்றும் நாணயம் போல அச்சிடப்படுவது இல்லை.
  • கணித சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய ஒரு மென்பொருள் மூலம் மக்களால், அதிகரிக்கும் தொழில் வளர்ச்சியால், உலகம் முழுக்க இயங்கும் கணினிகளால் பிட்காயின் தயாரிக்கப்படுகிறது.


மற்ற நாணயங்களில் இருந்து பிட்காயின் எவ்வாறு வேறுபடுகிறது?


  • மின்னணு முறையில் பொருட்களை வாங்க பிட்காயின் பயன்படும்.
  • அந்த வகையில், இது டாலர், யூரொ, ரூபாய் போன்ற நாணயம், மின்னணு முறையிலும் வர்த்தகம் செய்ய உதவும்.
  • எனினும், வழக்கமான நாணயங்களிலிருந்து பிட்காயின் வேறுபட்டு விளங்க இன்னொரு முக்கிய பண்பு இது பரவலாக்கப்பட்டுள்ளது என்பதுதான். 
  • எந்த ஒரு நிறுவனமும் பிட்காயினை கட்டுப்படுத்துவது இல்லை.
  • இது சிலருக்கு வசதியாக இருக்கிறது, ஏனெனில் அவர்களது பெருமளவிலான பணத்தை வங்கிகளாலும் கட்டுப்படுத்த முடியாது.


பிட்காயின் உருவாக்கியது யார்?


  • முதல் பிட்காயின் விவரக்குறிப்பு மற்றும் மாதிரி வடிவம் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது, பின்பு 2010-ம் ஆண்டு மென்பொருள் வெளியானது. 
  • தன்னைப் பற்றி தகவல் வெளியிடாத ஒருவரால் சடோஷி நகமோட்டா என்ற புனைபெயருடன் இம்மென்பொருள் வெளிவந்தது. 
  • அன்று முதல் இந்த பிட்காயின் சமூகம் அதிவிரைவாக வளர்ந்து வருகின்றது.


பிட்காயின் அச்சிடுவது யார்?


  • யாரும் இல்லை. 
  • இந்த நாணயம் எந்த ஒரு வங்கியாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிடப்பட்டு, மக்களிடம் புழக்கத்திற்கு வராமல், தனக்கான விதிகளை அமைத்து கொள்வதில்லை. 
  • வங்கிகள் தங்களது நாட்டின் கடன் சுமையை குறைக்க தொடர்ந்து நாணயங்களையும், பணத்தையும் அச்சிடுகின்றன, அது அந்நாட்டு பணத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.
  • மாறாக, பிட்காயின் மின்னணு முறையில் குறிப்பிட்ட குழுவால் தயாரிக்கப்படுகிறது. 
  • அக்குழுவில் யார்வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்.
  • பிட்காயின், விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னலில் (distributed network) உள்ள கணினியின் திறன்கொண்டு “வெட்டி” எடுக்கப்படுகின்றது.
  • மறைபணம் (virtual currency) கொண்டு இந்த வலைப்பின்னலானது பல பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பிட்காயின் தனது சொந்த கட்டண வலைப்பின்னலை திறம்பட உருவாக்கி வருகிறது.
  • எனவே நீங்கள் வரம்பற்ற பிட்காயின்களைக் கடைந்தெடுக்க முடியாது
  • ஆம், பிட்காயின் நெறிமுறை (protocol) – பிட்காயின்களை செயல்படுத்தும் விதிகள் – 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. 
  • எனினும் இவை சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. (அதாவது ஒவ்வொரு பிட்காயினை 0.00000001 பகுதிகளாகப் பிரித்துள்ளனர்) இந்த ஒரு பகுதியானது “சடோஷி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.


பிட்காயின் எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது?

  •   வழக்கமான பணம் தங்கம் அல்லது வெள்ளியின் அடிப்படையில்      தயாரிக்கப்படும்.
  • கோட்பாட்டளவில், பணத்தை வங்கிகளில் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ பெற்றுக்கொள்ளலாம் (இது நடைமுறையில் இல்லை)
  • ஆனால் பிட்காயின் தங்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை, மாறாக கணிதத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
  • பிட்காயின் தயாரிக்க உதவும் கணித வாய்ப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு மென்பொருட்களை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இந்த கணித வாய்ப்பாடு இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது, யார்வேண்டுமானாலும் பார்க்கலாம்.
  • திறந்த மூல மென்பொருள் (open source software) ஆதலால் யார்வேண்டுமானாலும் இதன் செயல்பாட்டை சரிபார்க்க முடியும்.
  • வேகமாக பரவி வரும் பிட்காயின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
  • சர்வதேச வணிகம் குறித்து நோக்கி வருபவர்களுக்கு பரீட்சயமான வார்த்தைதான் பிட்காயின் (Bitcoin). 
  • 1990களின் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்த தொடக்கத்தில் பணப்பறிமாற்றத்தில் பல குளறுபடிகள், மோசடிகள் நடந்தன. 
  • 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் ஃபைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தனர். 
  • இதிலிருந்து தப்பிக்கவே பிட்காயின் என்ற மெய்நிகர் பணம் உருவாக்கப்பட்டது.
  • இந்த பிட்காயின்தான் டிஜிட்டல் பரிவர்த்தனையின் முன்னோடியாகவும், அதன் தொடக்கப் புள்ளியாகவும் இருந்தது.
  • பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான கரன்சி இருக்கிறது. ஆனால் இந்த பிட்காயின் என்பது சர்வதேச கரன்சி ஆகும். 
  • எந்த நாட்டிலும் இந்த கரன்சியை மாற்றிக்கொள்ள முடியும். 
  • எந்த இடத்திலிருந்தும் இந்த பிட்காயின் மூலம் ஷாப்பிங் செய்ய முடியும். யாருக்கும் எங்கிருந்தும் பணம் அனுப்ப முடியும். 
  • இதை கண்டுபிடித்து யார் என்று இன்று வரையிலும் தெரியவில்லை.
  • இதை கண்டுபிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழுமமா? என்பது கண்டறியப்படவில்லை. 
  • ஆனால் சந்தோஷி நகமோடோ என்ற பெயரில் பிட்காயின் மற்றும் அதன் மென்பொருளை வெளியிட்டார்கள். 
  • இதன் மூலம் ஒருவர் யாருக்கும்? எந்த நாட்டில் வசிப்பவருக்கும் பணத்தை அனுப்ப முடியும். 
  • இந்த பரிவர்த்தனையை மூன்றாவது நபர் யாராலும் கண்டுபிடிக்க இயலாது. திருடவும் முடியாது. 
  • இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரிவர்த்தனைகளை நிகழ்த்தித் தரும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர்.
  • பிட்காயின் பரிவர்த்தனையை விவரிக்கும் வரைபடம்.
  • உலகம் முழுக்க ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
  • இதனை நிகழ்த்தும் பிளாக்செயின் இயக்க தளமானதின் பரிவர்த்தனைகள் அனைத்தும் புதிர் வடிவிலே இருக்கும். 
  • ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஒரு லட்ஜரில் பதிவேற்றப்படும். 
  • அடுத்த பத்து நிமிடங்களுக்கு நடக்கும் பரிவர்த்தனைகள் அடுத்த லெட்ஜரில் பதிவேற்றபடும். 
  • மைனிங் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின்கள் வழங்கப்படும். 
  • சமீபத்தில்தான் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில பிரபல வங்கிகள் பிட்காயின் பரிவரிதனைகளுக்கான சோதனைகளை நடத்தியன..
மேலும் இதை பற்றிய முழு தகவலுக்கு இந்த வீடியோவை பாருங்கள்


     




அணுகவும்
9626233344


கீழிருக்கும் App ஐ download செய்து கொள்ளுங்கள் எப்போது முடியுமோ invest செய்து கொள்ளுங்கள்


Buy Bitcoin in " ZEBPAY " APP:

Click Here : http://link.zebpay.com/ref/REF33447601

Buy Bitcoin in "UNOCOIN" Use this link below

https://www.unocoin.com/?referrerid=202671

Wednesday, 6 September 2017

சுக்கில் இருக்கு சூட்சுமம் !!


மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டை காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

👁‍🗨 சுக்கைத் தயாரிக்கும் பக்குவம் :

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள்முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல்தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்து கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்

பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்குகிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போதுபயன்படுத்தலாம்.

👁‍🗨 சுக்கு மொழிகள் பத்து :

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

 👁‍🗨 பொதுப்பயன்கள் :

பித்தம் அகற்றும். வாயு தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியை குணப்படுத்தும். மூட்டுவலி மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

👁‍🗨 மருத்துவப் பயன்கள் :

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்

கரும்பு

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!

மஞ்சள் காமாலை:

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

தொற்றுநோய்கள்:

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

சிறுநீரக கற்கள்:

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

நீரிழிவுக்கு கரும்பு:

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

புற்றுநோய்:

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

நீர் வறட்சி:

நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

அஸ்வகந்தா.மூலிகை

                                                                                                                                                                                       இந்தியாவில் கிடைக்கும் மிக அரிய மூலிகையான இந்த அஸ்வகந்தா மூலிகையை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மூலிகையாகும். சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். நாம் பொதுவாக வேகம் என்றால் குதிரையை தான் எடுத்துக்காட்டாக கூறுவோம்.
இந்த அஸ்வகந்தா மூலிகையானது நமக்கு ஒரு குதிரையின் ஆற்றலை தருகிறது. இது குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை.
முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த அஸ்வகந்தா மூலிகையின் மகத்தான பயன்களை இந்த பகுதியில் காணலாம்.

1. மன அழுத்தம் அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

2. நரம்பு மண்டலம் பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

3. கேன்சரை தடுக்க அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

4. நோய் எதிர்ப்பு சக்தி அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

5. ஆண்மை அதிகரிக்க! அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

6. வேகம் அதிகரிக்கும் அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

7. குணப்படுத்தும் பிற நோய்கள் அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

8. எப்படி சாப்பிடலாம்? நாட்டு மருந்து கடைகளில் அஸ்வகந்தா பொடி மற்றும் லேகிய வடிவில் கிடைக்கிறது. இதனை நீங்கள் நாட்டு மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம் - இயற்கை மருத்துவம்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு.

இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது.

உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் தருகிறது பெருங்காயம். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும். பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.

ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன. பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.

#மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

#நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

#மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

#கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

#பற்கள் -மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

#நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

#ரத்தம் -வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

#சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

#நுரையீரல் - இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

#வயிறு காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

#கணையம்

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.
கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

 #கல்லீரல் - மண்ணீரல்

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

 #மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

#பாதம் கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்

பாதம், விரல் வலி சரியாகும்.

Tuesday, 5 September 2017

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்…
இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!
விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.

மழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Rain to get well soon | ...





மழையில் நனைந்தால் நோய்கள் பறந்துபோகும் | Wet in Rain to get well soon | Organic Living https://youtu.be/OY4FiDyTSgE

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்துகாய்ச்சல் வந்தால்அவன் ஆரோக்கியமாக இல்லைஎனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறதுகாய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.
உடலில் பல நாட்களாகபல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும்சளியாகவும்மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானாஇல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால்மழையில் நனைந்தால் அவனுக்கு சலிபிடிக்காமல்,காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.
எனவேமழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.
நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும்குப்பைகளும்வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும்.
முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள்குப்பைகளை எடித்துக்கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழுபுச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது.

நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்துநமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகிநமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவேமழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.
குழந்தைகள் மலையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்.

மழையில் நனைவது மிகவும் அற்புதமானஅருமையானசந்தோஷமான மனதிற்கு பிடித்தமானபெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைபோல் நினைத்துக்கொண்டுஅதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.


எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்திநீர் பிராணன்நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாகஅமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

Monday, 4 September 2017

Happy Teacher Day | ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Organic Living






இயற்கைக்கு மாறுவோம் !!

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

🍅 இன்று பலரும் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்கி இருப்பது மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் பலரும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதில் தவறு செய்கின்றனர்.

🍆 இது பற்றிய எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

🍇 நான் ஒரு சு ப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தேன்.

🍈 அங்கு காய்கறிகள் பகுதியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என்ற பலகையின் கீழ் வெண்டை, கத்தரி மற்றும் சில கீரை வகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

🍉 அப்பொழுது ஒரு பெண்மணி இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பார்த்து விட்டு ஆர்வமாக அருகில் வந்தார்.

🍊 ஆனால் காய்கறிகளை பார்த்தவுடன் முகம் சுளித்தார். ஏனெனில் காய்கறிகள் பளபளப்பாக இல்லை. மேலும் ஒரு சில இடங்களில் பு ச்சி தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டன.

🍋 உடனே அந்த பெண்மணி, அங்கு இருந்த பணியாளர் ஒருவரை அழைத்து இப்படி காய்கறிகள் இருந்தால் எப்படி வாங்குவது? நல்ல காய்கறிகளை வையுங்கள், என்று கூறினார்.

🍍 அதற்கு அந்த பணியாளர் இது, இயற்கை முறையில் விளைந்தது என்று கூறினார். ஆனால் அந்த பெண்மணி சமாதானம் அடையவில்லை.

🍎 காய்கறிகளை வாங்காமல், இது போன்ற காய்கறிகளை நீங்கள் விற்பனை செய்தால் கடைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று போகிற போக்கில் போட்டு விட்டு சென்று விட்டார்.

🍐 காய்கறிகள் அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள அருகில் சென்று காய்கறிகளை பார்த்தேன்.

🍑 அந்த பெண்ணின் ஏமாற்றம் எனக்கு தெரிந்தது, அதே சமயம் அவர்களின் அறியாமையும் கூட....

🍒 நாம் எல்லாம் பளபளப்பாக, பு ச்சி தாக்குதல் இல்லாத காய்கறிகளை வாங்கி பழகியவர்கள். அவர் இயற்கையாக விளைந்த பொருட்களை பார்த்தவுடன் அதுவும் பளபளப்பாக தான் இருக்கும் என்று நம்பி ஏமாந்து விட்டார்.

🍅 ஆனால் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளில் தான் பு ச்சிகளின் தாக்குதல் இருக்கும் என்று அவர் அறியவில்லை.

🍇 ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பு ச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம்.

🍈 அதை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பு ச்சிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

இது எப்படி சாத்தியமாகும்?

🍊 வண்டுகளே உண்ணாத, புழுக்களே தாக்காத உணவு பொருட்களை நாம் சாப்பிட்டால் நாம் மனிதர்களா?

🍋 மேலும் விவசாயிகள் பு ச்சிமருந்துகளை பயன்படுத்துகிறார்கள், என்று அவர்களை குறை கூறும் நாம், இயற்கை முறையில் சற்றே புழு தாக்குதல் உடைய காய்கறிகளை வாங்க மறுப்பதை என்னவென்று கூறுவது?

🍍 அவர்கள் இயற்கை முறைக்கு மாறினாலும், அவர்களை மீண்டும் பு ச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தூண்டுவது நாம் தான்.....!!

🍎 மீண்டும் நான் உள்ளே சென்று பொருட்களை வாங்கி வருவதற்குள் அந்த பணியாளர் அங்கிருந்த இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்ற அட்டையை எடுத்து விட்டார்.

🍐 அது மட்டுமில்லாமல் அங்கு இருந்த காய்கறிகளின் இடம் காணாமல் போய்விட்டது. இனிமேல் அந்த கடையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளுக்கு இடம் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

🍒 அந்த இடத்தில் ஒரு விவசாயின் உழைப்பு வீணானது. நம்மால் ஒருவரின் உழைப்பு வீணாகலாமா?